districts

img

புற்றுநோய் பாதிப்பு:  விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை, நவ.7 - தேசிய புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தனியார் செவிலியர் கல்லூரியில் திங்கள்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை சிவபுரத்தில் உள்ள கற்பக விநா யகா தனியார் செவிலியர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி யுடன் திருச்சி அப்பல்லோ மருத்துவமனை, ரோட்டரி சங்கம், யூத் ரெட் கிராஸ் அமைப்புகள் இணைந்து தேசிய  புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.  இதில் புற்றுநோய் எதனால் உருவாகிறது, என்னென்ன சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும், எத்தனை வகை யான புற்றுநோய்கள் உள்ளன. நோய் கண்டறியப்பட்ட உடன் முதல் நிலையிலேயே என்னென்ன செய்ய வேண்டும் என மருத்துவர்கள் விளக்கமளித்தனர். மேலும், செவிலியர் கல்லூரியில் பயிலும் 30 மாணவி கள் ஒன்றிணைந்து என்னென்ன தீய பழக்கத்தினால் புற்றுநோய்கள் உருவாகிறது, புற்றுநோய் பாதித்தால்  அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும், புகைபிடிப்பதால்  நுரையீரல் எவ்வாறு பாதிப்படையும் உள்ளிட்டவற்றை கோலங்கள் மூலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.